நெடுநாட்களாக நீடிக்கும் பலத்த மழையுடனான காற்று காரணமாக, வடகிழக்கு கல்கரியில் (NE Calgary) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் (SUV) ஒன்றின் மீது பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு அல்பர்ட்டா (Southern Alberta) பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கடுமையான புயல், மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, வடகிழக்கு கல்கரியின் ஒயிட்ஹார்ன் (Whitehorn) பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற SUV ரக காரின் முன்பகுதியின் (Hood) மீது மரம் விழுந்து கிடப்பதை கண்ட அதன் உரிமையாளர், அதிர்ச்சியடைந்து உடனடியாக 911 அவசர உதவி எண்ணை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்கால மீட்புக்குழுவினர், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.
கார் பலத்த சேதமடைந்ததால் அந்தப் பெண்ணால் அன்று வேலைக்குச் செல்ல முடியவில்லை.
அல்பர்ட்டாவின் சில பகுதிகளில் 40 முதல் 135 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ள நிலையில், கல்கரி நகருக்கான மழை எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.
அத்துடன், போவ் (Bow River) மற்றும் எல்போவ் (Elbow River) ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் ஆற்றங்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கல்கரி தீயணைப்புத் துறை (Calgary Fire Department) அறிவுறுத்தியுள்ளது.
