பிராம்ப்டனில் பயங்கரம் – துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி! தப்பியோடியவர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு!

கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 10:23 மணியளவில் ரூதர்போர்ட் வீதி (Rutherford Road) மற்றும் வேப்ரிட்ஜ் டிரெயில் (Weybridge Trail) சந்திப்பிற்கு அருகில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் அவசர மருத்துவ உதவியாளர்களும் (Peel paramedics), துப்பாக்கிக் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

எனினும், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் அல்லது நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், அவர்களைக் கைது செய்யப் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது அந்தப் பகுதி முழுமையாக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles