டொராண்டோ (Toronto) மற்றும் ஜி.டி.ஏ (GTA) பகுதிகள் இந்த வாரத் தொடக்கத்தில் வசந்தகால வெப்பமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும், அதனுடன் இணைந்த கனமழை, இடியுடன் கூடிய புயல் மற்றும் திடீர் வெப்பநிலை வீழ்ச்சி போன்ற சவால்களைச் எதிர்கொள்ள நேரிடும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை வெப்பநிலை 16°C ஆக உயர்ந்து இதமான வானிலை நிலவியது. ஆனால், இன்று இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
நாளை செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 17°C வெப்பம் பதிவாகும் அதேவேளை, 10-20 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என கூறப்படுகிறது.
புதன்கிழமை ஒரு மாறுதல் நாளாக அமையும் என்றும் பகலில் 8°C வெப்பம் நிலவினாலும், அன்று இரவு முதல் குளிர் காற்று வீசத் தொடங்குவதால் உறைபனி மழை (Freezing rain) அல்லது ஐஸ் கட்டிகள் (Ice pellets) விழும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வியாழக்கிழமை வெப்பநிலை 3°C ஆகக் குறைந்து, மீண்டும் 15-30 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாரம் முழுவதும் நிலவவுள்ள இந்தத் திடீர் காலநிலை மாற்றங்கள் குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.










