உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளைக் காண்பதற்குக் மைதானத்திற்குள் வரும் ரசிகர்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களைக் (Reusable Water Bottles) கொண்டு வருவதற்கு FIFA அமைப்பு தடை விதித்துள்ளது.
இந்த அதிரடி முடிவானது “முற்றிலும் பணப் பறிப்பு நடவடிக்கை” (Pure money grab) என றொரண்டோடோ (Toronto) நகர மேயர் Olivia Chow கடுமையாகச் சாடியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “FIFA ஏற்கனவே பில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகிறது; இது முற்றிலும் அநியாயமானது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் சொந்தப் போத்தல்களைக் கொண்டு வருவதே நல்லது என சாடியுள்ளார்.
இதற்குப் பதிலாக மைதானத்திற்குள் றொரண்டோடோ நகரத்தின் சுத்தமான குடிநீருடன் கூடிய இலவச போத்தல்களை ரசிகர்களுக்கு FIFA வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
நகர சபை உறுப்பினர் Josh Matlow மற்றும் றொரண்டோடோ சுற்றுச்சூழல் கூட்டமைப்பு (Toronto Environment Alliance) ஆகியோரும் இந்தத் தடைக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், வீரர்களினதும் ரசிகர்களினதும் பாதுகாப்பு மற்றும் வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FIFA தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
றொரண்டோடோ ஸ்டேடியத்தில் (Toronto Stadium – BMO Field) ஜூன் 12 அன்று முதலாவது உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள பின்னணியில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
