றொரண்டோ (Toronto) நகரின் பொது இடங்களில் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து றொரண்டோ பொலிஸார் திங்கள்கிழமை மதியம் 1 மணிக்கு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.
இதில் பொலிஸார் கண்காணிப்பாளர் ‘Superintendent Ron Taverner’ கலந்துகொண்டு இந்த முக்கிய கைதுகள் குறித்த விபரங்களை வெளியிட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் திசைதிருப்பும் உத்திகளைக் கையாண்டு (Diversionary tactics) திருடி வந்த சந்தேக நபர்களைக் பொலிஸார்யினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இந்தத் தொடர் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள், இத்தகைய குற்றங்களைக் குறைப்பதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
சமீபகாலமாக றொரண்டோவில் இவ்வாறான திருட்டுகள் அதிகரித்து வருகின்றன.
முகவரிகளைக் கேட்பது போலோ, பொருட்களைக் கீழே போடுவது போலோ அல்லது பேச்சுக் கொடுத்து கவனத்தைத் திசை திருப்புவது போலோ நடித்து, உடந்தையாக இருப்பவர்களின் உதவியுடன் பணப்பை, தொலைபேசி மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருடுவதே இவர்களின் பாணியாகும்.
போக்குவரத்து நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் இத்தகைய குற்றங்கள் அதிகம் நடப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.










