கனடாவின் றொரண்டோவில் (Toronto) 15 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள செரோகி பவுலேவார்ட் (Cherokee Boulevard) மற்றும் ஷாவ்னி சர்க்கிள் (Shawnee Circle) ஆகிய வீதிகள் சந்திக்கும் பகுதிக்கு அருகில், இரவு 10 மணிக்கு சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 15 வயது சிறுவன், சிகிச்சைக்காகத் தானாகவே மருத்துவமனைக்குச் சென்று அனுமதிந்துள்ளான்.
அச்சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விபரங்கள் எதையும் பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.
