பிராம்ப்டனில் சோகம் – பிறந்த குழந்தை சடலமாக மீட்பு – 23 வயது பெண் கைது!

பிராம்ப்டனில் உள்ள கென்னடி வீதி வடக்கு மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே (Kennedy Road North and Williams Parkway) சந்திப்பு பகுதியில் உள்ள வீடொன்றில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8:23 மணியளவில் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் பீல் பிராந்திய பொலிஸ் (Peel Regional Police – PRP) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்த பின்னர் அதன் உடலை மறைக்க முயன்றதாக (Concealing the body of a child after birth) அந்தப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தைக்கும், கைது செய்யப்பட்டுள்ள பெண்ணுக்கும் இடையிலான உறவுமுறை குறித்து காவல்துறையினர் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இச்சம்பவம் குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles