கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் இன்று 50 மில்லிமீட்டர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என Environment Canada சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏரி ஏரி (Lake Erie) மற்றும் ஏரி ஒன்ராறியோ (Lake Ontario) ஆகியவற்றின் வடக்கு பகுதியில் நகரும் குறைந்த அழுத்த மண்டலம் (Low-pressure system) காரணமாக, தெற்கு ஒன்ராறியோவின் பல பகுதிகளில் 30 முதல் 50 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு பதிவாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று காலை முதல் 10 முதல் 20 மில்லிமீட்டர் வரை மழை பெய்யத் தொடங்கியுள்ளதுடன், வெப்பநிலை 13 பாகை செல்சியஸாகக் காணப்படுகிறது.
தற்போது வரை அவசர “மழை எச்சரிக்கை” (Rainfall warning) எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த பலத்த மழை இரவு முழுவதும் நீடித்து, ஞாயிற்றுக்கிழமை நண்பகலுடன் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 21 பாகை செல்சியஸாக உயரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
