பிரிட்டிஷ் கொலம்பியாவின் (British Columbia) டெரஸ் (Terrace) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பனிச்சரிவில் உயிரிழந்த மூவரும் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் (Swiss nationals) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மவுண்ட் நாஸ் (Mount Knauss) மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இவர்களுடன் சென்ற சுற்றுலா வழிகாட்டி படுகாயமடைந்து வான்கூவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து, ‘வைட் வைல்டர்னஸ் ஹெலிஸ்கையிங்’ (White Wilderness Heliskiing – WWH) நிறுவனம் தனது சேவைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைத்துள்ளது.
இது ஒரு பணியிட விபத்து என்பதால், WorkSafeBC அமைப்பு மற்றும் ஆர்.சி.எம்.பி (RCMP) பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2025 டிசம்பர் முதல் இதுவரை பி.சி மாகாணத்தில் பனிச்சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைப்பகுதிகளில் பணிபுரிவோர் மற்றும் சுற்றுலா செல்வோர் வானிலை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
