கோவிட்-19 பெருந்தொற்று பரவி ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கனடிய மத்திய அரசு அதனை வெற்றிகரமாக கையாண்தென 56 சதவீத கனடியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Research Co. நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, கடந்தாண்டை விட மக்களின் திருப்தி விகிதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே இந்தத் திருப்தி விகிதம் 50-லிருந்து 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதுவே ஒட்டுமொத்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் மரியோ கான்செகோ (Mario Canseco) தெரிவித்துள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) பதவி விலகி, மார்க் கார்னி (Mark Carney) பிரதமராகப் பதவியேற்ற பிறகு, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும் பெருந்தொற்று கால நடவடிக்கைகள் குறித்த மக்களின் பார்வையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
மாகாண அரசுகளின் (56%) மற்றும் மாநகராட்சிகளின் (55%) செயல்பாடுகள் குறித்தும் மக்கள் திருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, பெருந்தொற்று மேலாண்மை குறித்து பொது விசாரணை (Public inquiry) நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டை விட 2 சதவீதம் குறைந்து 62 சதவீதமாக உள்ளது.
