கனடாவின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்பிரஸ் என்ட்ரி (Express Entry) திட்டத்தின் புதிய பிரிவுகளை கனடா குடியேற்றத் துறை அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) அறிவித்துள்ளார்.
திறன்மிக்க புலம்பெயர்ந்தோரை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பிரிவுகளின் கீழ் கனடாவில் பணி அனுபவம் உள்ள வெளிநாட்டு மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விமானிகள் (Pilots), விமான மெக்கானிக்குகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறை சார்ந்தவர்களும் வாய்ப்பு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனடிய ஆயுதப்படையில் (Canadian Armed Forces) பணியாற்ற வெளிநாட்டு இராணுவ மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கும் இதனூடாக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்தேடு, கடந்த 2025 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த பிரெஞ்சு மொழிப் புலமை (French skills), சுகாதாரம் மற்றும் சமூக சேவைகள், மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான (Trades) முன்னுரிமைகள் இந்த ஆண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அழைப்புகள் (Targeted draws) உதவும் என அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் (Lena Metlege Diab) தெரிவித்துள்ளார்.
