றொரண்டோ (Toronto) நகரின் புகழ்பெற்ற PATH நிலத்தடி நடைபாதையில், கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இனவெறித் தூண்டுதலால் அமைந்த தாக்குதல் மற்றும் இந்த வாரம் இடம்பெற்ற மற்றொரு தாக்குதல் தொடர்பாக 37 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 16 அன்று, ஸ்கோடியா பிளாசா (Scotia Plaza) மற்றும் பர்ஸ்ட் கனடியன் பிளேஸ் (First Canadian Place) ஆகிய இடங்களுக்கு இடையிலான நிலத்தடி பாதையில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்த சந்தேக நபர், அவர் மீது துப்பியுள்ளார்.
இதனை அந்த நபர் தட்டிக்கேட்டபோது, கருப்பினத்தவர்களுக்கு எதிரான இனவெறிச் சொற்களைப் பயன்படுத்தி (Anti-Black racial slurs), ஆக்ரோஷமான முறையில் அவரைத் தாக்க முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 8 அன்று யங் மற்றும் கிங் வீதி (Yonge and King streets) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டபோது.
அங்கிருந்த ஒருவரை ஆயுதத்தால் தாக்க முயன்ற சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் டொராண்டோவைச் சேர்ந்த டேரன் தோமி (Darren Thomey) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் மீது வெறுப்புணர்வுத் தாக்குதல் மற்றும் ஆயுதத்தால் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.










