கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில், கடந்த ஏப்ரல் 30 மற்றும் மே 7 ஆகிய திகதிகளில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாக இரண்டு பதின்ம வயதினர் உட்பட மேலும் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெரியவர்கள் லூகா சோகெலி (Luka Chokheli – 20) மற்றும் அலிஷஹின் இசாயேவ் (Alishahin Isayev – 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மற்ற இருவர் 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இவர்கள் மீது ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவங்களில் லெக்ஸஸ் (Lexus) ரக வாகனத்தைப் பயன்படுத்தி, போலித் துப்பாக்கிகள் (Orbeez-type / Imitation firearm) மூலம் யூத மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்டு யூத சமூகத்தை இலக்கு வைத்தே நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் அதிகாரி கேத்தரின் ஸ்டீபன்சன் (Katherine Stephenson) உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ருஸ்லான் நோவ்ருசோவ் (Ruslan Novruzov – 18) என்பவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.










