றொரண்டோவில் அவசர அழைப்புகள் திடீர் அதிகரிப்பு – தீயணைப்புப் படை தகவல்!

கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் கடந்த 24 மணித்தியாலங்களில் அவசர உதவி கோரி வரும் அழைப்புகளின் எண்ணிக்கை வழமையை விட 41 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ தீயணைப்புப் படை (Toronto Fire Services – TFS) தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 622 அவசர சம்பவங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலிலும், அழைப்புகளை ஏற்று முன்னுரிமை அடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட பணியாளர்களின் அர்ப்பணிப்பை தீயணைப்புப் படைத் தலைவர் ஜிம் ஜெஸப் (Jim Jessop) பாராட்டியுள்ளார்.

இருப்பினும், அவசர அழைப்புகள் திடீரென இந்த அளவுக்கு அதிகரித்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் அவை எவ்வகையான அவசர அழைப்புகள் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles