நெதன்யாகுவை ‘அமைதியின் எதிரி’ என விமர்சித்த எலிசபெத் மே!

கனடிய பசுமைக் கட்சியின் (Green Party) தலைவரான எலிசபெத் மே (Elizabeth May), இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) “அமைதியின் எதிரி” என்று பகிரங்கமாக விமர்சித்ததார்.

அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டதால்  அவர் மௌனித்தார்.

காஸாவில் (Gaza) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், பிராந்திய ரீதியான மோதல்களைத் தூண்டுவதற்கும் நெதன்யாகுவின் அரசாங்கமே காரணம் என அவர் தனது உரையில் சாடினார்.

எலிசபெத் மே பேசத் தொடங்கியதும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள் (MPs) அவருக்கு எதிராகக் கூச்சலிட்டுப் போர்க்கொடி தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் (Speaker) தலையிட்டு அவரது உரையைத் தடுத்து நிறுத்தினார்.

இதன்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பிடியாணை எச்சரிக்கைகள் மற்றும் காஸா போரில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்து அவர்

இருப்பினும், கனடிய நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவரது கருத்தை ஏற்க மறுத்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் கனடாவில் நிலவும் கருத்துச் சுதந்திரம் மற்றும் காஸா விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது.

பிரித்தானியாவில் நிலவும் அரசியல் சூழலைப் போலவே, கனடாவிலும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள் ஒடுக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போர் குற்றச்சாட்டுகள் மற்றும் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஒரு தலைவரைப் பற்றிப் பேசுவதற்குக் கூட நாடாளுமன்றத்தில் அனுமதி மறுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எனப் பசுமைக் கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles