அமெரிக்காவின் சான் டியேகோ (San Diego) நகரில் உள்ள முக்கிய மசூதி ஒன்றில், புகுந்த இரு பதின்ம வயது (Teenage) துப்பாக்கிதாரிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
திங்கட்கிழமை அன்று சான் டியேகோ இஸ்லாமிய மையத்தில் (Islamic Center of San Diego) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை வெறுப்புக் குற்றமாகப் (Hate crime) பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் ராணுவ உடை (Camouflage) அணிந்து வந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்குப் பின்னர், சில வீதிகள் தள்ளியிருந்த ஒரு வாகனத்திற்குள் இருவரும் தங்களைத் தாங்களே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.
ஆயுதங்களுடன் தப்பியோடிவிட்டதாக அவனது தாய் பொலிஸாருக்கு முன்பே எச்சரித்திருந்தார்.
இதனால் பொலிஸார் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இவர்களைத் தேடி வந்த நிலையிலேயே இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மசூதியின் பாதுகாப்பு அதிகாரியும் ஒருவர் ஆவார்.
அவர் துப்பாக்கிதாரிகளைத் தடுத்து நிறுத்திய வீரம் செறிந்த செயலே, உயிரிழப்புகள் பெரும் அளவில் அதிகரிப்பதைத் தடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாகப் பொலிஸ் அதிகாரி ஸ்காட் வால் (Scott Wahl) தெரிவித்துள்ளார்.
மசூதியின் வளாகத்தில் உள்ள பாடசாலைக் குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலுக்கு மசூதியின் இமாம் தாஹா ஹசானே (Imam Taha Hassane) மற்றும் CAIR அமைப்பின் நிர்வாக இயக்குனர் தசீன் நிஜாம் (Tazheen Nizam) ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இனம், மதம் கடந்த சமூகப் பணிகளுக்காக அறியப்படும் இந்த இஸ்லாமிய மையத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
