கனடாவின் ‘மிகவும் தேடப்படும்’ குற்றவாளி அமெரிக்காவில் கைது – டொராண்டோ மக்களுக்கு நிம்மதி!

கனடாவின் ‘போலோ’ (BOLO) அமைப்பினால் மிகவும் தேடப்படும் 25 குற்றவாளிகளின் பட்டியலில் இருந்த அட்ரியன் வால்கர் (Adrian Walker), அமெரிக்காவின் மிசிசிப்பி (Mississippi) மாகாணத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு (Oxford) நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 23, 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு டொராண்டோவில் இடம்பெற்ற இரட்டைத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இவர் தேடப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2024 மே 7 ஆம் திகதி, டொராண்டோவின் ஓக்வுட் வில்லேஜ் (Oakwood Village) பகுதியில் நின்றிருந்த ஒரு பெண் மற்றும் ஆணொருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 31 வயதான ட்ரெவர் டால்டன்-ஜான் (Trevor Dalton-John) என்பவர் உயிரிழந்தார்.

அட்ரியன் வால்கர் தற்போது கனடாவுக்கு அழைத்து வரப்பட்டு, அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்படவுள்ளன.

இந்தக் கொலை வழக்குத் தொடர்பாக ஏற்கனவே கெமியன் பிராங்க்ளின் (Kemyan Franklyn) என்பவர் 2024 ஆம் ஆண்டிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.

நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளமை டொராண்டோ மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles