விண்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற நாடாக விளங்கும் கனடா, இதுவரை தனது செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு பிற நாடுகளையே சார்ந்திருந்தது.
இந்நலையில், தற்போது முதன்முறையாக உள்நாட்டிலேயே ரொக்கெட்டுகளை ஏவும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்காக பெடரல் அரசாங்கம் சுமார் கால் பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
நோவா ஸ்கோஷியா (Nova Scotia) மாகாணத்தில் உள்ள கான்சோ (Canso) நகருக்கு அருகில் Maritime Launch Services நிறுவனத்தால் அமைக்கப்படும்.
இதற்காக “ஸ்பேஸ்போர்ட் நோவா ஸ்கோஷியா” (Spaceport Nova Scotia) எனும் ஏவுதளத்திற்காக 200 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
2027 ஆம் ஆண்டுக்குள் இங்கிருந்து செயற்கைக்கோள்களைச் சுற்றுப்பாதைக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மெலிசா க்வின் (Melissa Quinn) தெரிவித்துள்ளார்.
மேலும், ‘லான்ச் தி நார்த்‘ (Launch the North) திட்டத்தின் கீழ், ஒன்ராறியோவின் மார்க்கம் (Markham) நகரைச் தளமாகக் கொண்ட நோர்ட்ஸ்பேஸ் (Nordspace) உள்ளிட்ட மூன்று உள்நாட்டு நிறுவனங்களுக்கு தலா 8 மில்லியன் டொலர்கள் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் டேவிட் மெக்குயின்டி (David McGuinty) கூறுகையில், தேசப் பாதுகாப்பு மற்றும் தன்னாட்சிக்கு விண்வெளிக்கான நேரடி அணுகல் மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் பணிபுரியும் கனடிய விண்வெளி நிபுணர்கள் மீண்டும் தாயகம் திரும்பிப் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.










