கனடிய கஞ்சா நிறுவனத்தின் மீதான வழக்கில், 8 மில்லியன் டொலர் நஷ்டஈடு வழங்க ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் (Ontario Superior Court of Justice) மார்ச் 19 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Maricann Group Corp நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட கூட்டு நடவடிக்கை வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2017 டிசம்பர் 13 முதல் 2019 ஆகஸ்ட் 2 ஆம் திகதி வரை, லேங்டன் (Langton, Ont.) பகுதியில் உள்ள தனது உற்பத்தி நிலைய விரிவாக்கத் திட்டங்கள் குறித்துத் தவறான தகவல்களை வழங்கி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக அந்நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்து சந்தையிலிருந்து நீக்கப்பட்டன.
தற்போது எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின்படி, குறிப்பிட்ட காலப்பகுதியில் பங்குகளை வாங்கி நஷ்டமடைந்த முதலீட்டாளர்கள் இழப்பீடு கோர முடியும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Berger Montague சட்ட நிறுவனத்தின் இணையதளம் அல்லது nuvoclaims.com ஊடாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
