இந்த வசந்த காலத்தின் தொடக்கத்தில், MV Hondius சொகுசு கப்பலில் பயணித்த போது ஹன்டாவைரஸ் தொற்றால் கனடிய பயணிகள் சிலரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது அவர்களில் ஒருவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் Yukon பகுதியைச் சேர்ந்தவர். இவருடன் பயணித்த மற்ற மூன்று கனடியர்களும் கடந்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
அவர்களுக்கு இதுவரை எந்தவித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை.
அவர்களுக்கு 42 நாட்கள் தனிமைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ஆம் திகதிக்குப் பிறகு, அர்ஜென்டினாவில் (Argentina) இருந்து அண்டார்டிகா (Antarctica) நோக்கிச் சென்ற போதே இந்த கப்பலில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த கப்பல் பயணத்துடன் தொடர்புடைய சுமார் 11 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர்.
கனடாவில் பொதுமக்களுக்கு இந்த வைரஸினால் ஏற்படும் ஆபத்து மிகவும் குறைவு என்று கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (Public Health Agency of Canada) உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.










