மெக்சிகோவின் புவேர்ட்டோ வல்லார்டா (Puerto Vallarta) பகுதியில் ஏற்பட்ட திடீர் வன்முறை மற்றும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் சிக்கியிருந்த கனடியப் பயணிகள், செவ்வாய்க்கிழமை டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தை (Toronto Pearson Airport) வந்தடைந்தனர்.
மெக்சிகோ அரசாங்கத்தின் நடவடிக்கையில் முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வீதித் தடைகள், துப்பாக்கிச் சூடு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறின.
வன்முறை வெடித்தபோது சுற்றுலாப் பயணிகள் தங்களது விடுதிகளிலேயே தங்கியிருக்குமாறு (Shelter in place) அறிவுறுத்தப்பட்டனர்.
சுமார் 16,600 கனடியர்கள் வசிக்கும் ஜாலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் இந்த பாதிப்பு அதிகமாக இருந்தது.
எவ்வாறாயினும் நிலைமை இன்னும் முழுமையாக மாறவில்லை என்றும், மெக்சிகோ செல்லும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) மற்றும் Global Affairs Canada அறிவுறுத்தியுள்ளனர்.










