தனது குழந்தையையே கொன்ற தாய் ​நோவா ஸ்கோஷியாவில் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நோவா ஸ்கோஷியாவின் யர்மவுத் (Yarmouth) பகுதியில், தனது 17 மாதக் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ஏப்ரல் வெண்டி மேரி சுரேட் (April Wendy Marie Surette) என்ற 32 வயதுப் பெண்ணுக்கு நீதிமன்றம் இன்று 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது மகன் ஐசாயா சுரேட் (Isaiha Surette) அழுதுகொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த தாய் அவனைப் படுக்கையிலிருந்து கடினமான தரையில் தூக்கி எறிந்ததில் குழந்தை உயிரிழந்தது.

இந்த வழக்கில் ஏப்ரல் சுரேட் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து (Guilty plea), அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குழந்தை இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் குழந்தைகள் நலப் பிரிவினரால் மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையின் தந்தை ஜொனாதன் எவன்ஸ் (Jonathan Evans) சம்பவம் நடந்த நேரத்தில் அருகில் உள்ள வீடொன்றில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி தீர்ப்பளிக்கும்போது, இது ஒரு மிகப்பெரிய சமூக இழப்பு என்றும், மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சோகம் என்றும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் சுரேட் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்ததே இந்த விபரீதத்திற்குப் பின்னணியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது” என்பதை இந்தத் தண்டனை உறுதிப்படுத்துவதாக அரசு வழக்கறிஞர் ராப் கென்னடி (Rob Kennedy) தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles