வியாழக்கிழமை இரவு, ஒவ்வொரு மணிநேரத்தின் முதல் 5 நிமிடங்களுக்கும் சிஎன் கோபுரத்தின் (CN Tower) பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டு, மறைந்த அதிகாரி மார்க் பினிசோட்டோவுக்கு (Marc Pinizzotto) மரியாதை செலுத்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் (U.S. Consulate) நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட பல சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்காக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்திய போது, 43 வயதான மார்க் பினிசோட்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
மறைந்த அதிகாரியின் உடல் பிரேத பரிசோதனை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நூற்றுக்கணக்கான காவல் அதிகாரிகள் திரண்டு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்த வழக்கில் 19 வயதான நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett) என்பவருக்கு எதிராக முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலைமறைவாக உள்ள சாரா ஜாபி (Zara Jabbi) என்ற 19 வயதுடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
றொரண்டோ மேயர் ஒலிவியா சௌ (OliviaChow), ஒன்டாரியோ பிரீமியர் டக் போர்ட் (Doug Ford) மற்றும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான், ஒன்டாரியோ மாகாண பொலிஸ் அதிகாரி தருண் பாலி (Tarun Bali), ஹியர்ஸ்ட் (Hearst) நகருக்கு அருகே வாகனம் மோதி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. www.cp24.com










