Mississauga-வில் அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுக்க முயன்ற எட்டு பேர், திட்டமிட்ட மோசடியில் சிக்கி 30,000 டொலருக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர்.
2025 ஜனவரி – பெப்ரவரி மாதங்களுக்கு இடையில், சமூக ஊடகங்களில் வாடகை வீட்டு விளம்பரங்களைப் பார்த்து, வீட்டை பார்க்கச் சென்றவர்களுக்கு, அங்கு தற்போதைய குடியிருப்பாளர்கள் போல நடித்தவர்கள் apartment-ஐ காட்டியுள்ளனர். வீட்டை பார்த்தவர்கள் பின்னர் online-ல் rental agreement கையெழுத்திட்டு, deposit உள்ளிட்ட பணத்தை e-transfer மூலம் அனுப்பியுள்ளனர்.
ஆனால் குடியேற வேண்டிய நாளில் சென்றபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது — அந்த apartment அவர்களுக்கு வாடகைக்கு கிடைக்கவில்லை; landlord என கூறியவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட apartment, சந்தேகநபர்களால் online short-term rental platform ஒன்றின் மூலம் தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். அதன் உண்மையான உரிமையாளர்கள் சந்தேகநபர்கள் அல்ல.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 23 வயதான Jashanpreet Sidhu மற்றும் 24 வயதான Priyanshu Goel ஆகிய இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.










