வாழ்நாள்  தடைக்குப் பின் மீண்டும் களமிறங்கும் Toronto Raptors அணியின் ஜொன்டி  பொட்டர்!

சூதாட்டப் புகாரால் NBA தொடரிலிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட Toronto Raptors அணியின் முன்னாள் வீரர் Jontay Porter, தற்போது மீண்டும் தொழில்முறை கூடைப்பந்து ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார்.

அவர் 2026-ஆம் ஆண்டு பருவகாலத்திற்காக, United States Basketball League (USBL) தொடரில் உள்ள Seattle SuperHawks அணியுடன் ஒப்பந்தமாகியுள்ளார்.

2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ரகசியத் தகவல்களைப் பகிர்ந்தது மற்றும் போட்டிகளில் சூதாடியது போன்ற காரணங்களுக்காக இவருக்கு NBA தடை விதித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது 26-வது வயதில் அவர் மீண்டும் களம் காண்கிறார்.

Seattle அணி தனது முதல் ஆட்டத்தை Lilac City Legends அணிக்கு எதிராக மார்ச் 7-ஆம் தேதி விளையாடவுள்ளது.

அன்றைய தினம் Jontay Porter தனது அறிமுக ஆட்டத்தை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles