றொரண்டோவில் இந்தியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் றொரண்டோவில் (Toronto) எவ்வித முன்னறிவிப்புமின்றி இரண்டு அந்நியர்களைச் சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் எட்வின் (Richard Edwin) என்பவருக்கு, 25 ஆண்டுகளுக்குப் பரோல் அற்ற ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.​

செனெகா கல்லூரியின் (Seneca College) மாணவரான 21 வயது கார்த்திக் வாசுதேவ் (Kartik Vasudev) மற்றும் எலிஜா மஹேபாத் (Elijah Mahepath) ஆகிய இருவர் எவ்வித தூண்டுதலுமின்றி எட்வினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த கொலைகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை (Planned and deliberate) என நீதிபதி ஜேன் கெல்லி (Justice Jane Kelly) உறுதிப்படுத்தினார்.

கொலையாளிக்கு மனநல பாதிப்பு (Schizophrenia) இருந்தபோதிலும், தனது செயலின் தீய விளைவுகளை அவர் அறிந்திருந்தார் எனக் கூறி, அவரின் தண்டனையைக் குறைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

கார்த்திக் வாசுதேவ் ஷெர்போர்ன் (Sherbourne) ரயில் நிலையத்திற்கு அருகே வேலையிலிருந்து திரும்பியபோது கொல்லப்பட்டார்.

இரண்டு நாட்களுக்குப் பின் எலிஜா மஹேபாத் இதே முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

“தனது மகனுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருந்து நீதியைப் பெற்றுள்ளேன்” என கார்த்திக்கின் தாயார் பூஜா கண்ணீருடன் தெரிவித்தார்.

எட்வின் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய போதிலும், “எங்கள் மகனைப் பறித்த பின் இந்த மன்னிப்பினால் பயன் ஏதுமில்லை” என கார்த்திக்கின் தந்தை ஜிதேஷ் (Jitesh) அதனை நிராகரித்தார்.

Video thumbnail
அமெரிக்காவில் அதிர்ச்சி - தனது பிள்ளைகள் உட்பட 8 சிறுவர்களை சுட்டுக்கொன்ற தந்தை!
01:00
Video thumbnail
றொரண்டோவில் சோகம் - வாகனத்திற்குள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!
00:55
Video thumbnail
இணையதளத்தில் தவறான மருத்துவத் தகவல்கள் - எச்சரிக்கும் கனடிய மருத்துவர்கள்!
01:19
Video thumbnail
பிராம்ப்டனில் தொடர் தீவைப்பு - ஒரே இரவில் 4 இழுவை வாகனங்கள் எரிப்பு!
00:40
Video thumbnail
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பணவீக்கம் உயர்வு - விலைவாசி மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை!
01:21
Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20

Related Articles

Latest Articles