அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் உடனான போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் தனக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.
இதனால், அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
நேட்டோவின் 5வது சரத்தின்படி (Article 5), ஒரு உறுப்பினர் தாக்கப்பட்டால் அனைவரும் இணைந்து பதிலளிக்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு நேட்டோ நாடுகள் ஆதரவு அளிக்க மறுப்பது ட்ரம்ப்பை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இது குறித்து அரசியல் ஆய்வாளர் அரேல் பிரவுன் (Aurel Braun) கூறுகையில், ட்ரம்ப்பின் தன்னிச்சையான போக்கும், நேட்டோவை அவர் இழிவுபடுத்திப் பேசுவதும் சர்வதேச பாதுகாப்பு உத்திகளை வகுப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைச் சாராமல் தங்களின் இராணுவப் பலத்தை அதிகரிக்க முயன்றாலும், கனடாவைப் பொறுத்தவரை அது சாத்தியமற்றது என நிபுணர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுடன் பகிரப்பட்டுள்ள நீண்ட எல்லை மற்றும் புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டு கனடாவால் தனித்து இயங்க முடியாத இக்கட்டான நிலைமை காணப்படுவதாக ஆய்வாளர் எர்வான் லகாடெக் (Erwan Lagadec) சுட்டிக்காட்டியுள்ளார்.










