கனடியப் பராமரிப்பாளர்கள் சந்திக்கும் நெருக்கடி – புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

கனடாவில் ஊதியமின்றித் தங்கள் அன்புக்குரியவர்களைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் (Caregivers), நிதி மற்றும் மன ரீதியான பாரிய நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ‘கனடியப் பராமரிப்புச் சிறப்பு மையம்’ (CCCE) வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவில் 77 சதவீத பராமரிப்பாளர்கள் தங்கள் நல்வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் (B.C.) மட்டும் 74 சதவீத பராமரிப்பாளர்கள் பதற்றம் அல்லது கவலையுடனும், 18 சதவீதத்தினர் மனச்சோர்வுடனும் (Depression) காணப்படுகின்றனர்.

கனடியப் பராமரிப்பாளர்களில் அரைவாசிப் பேரும் (49%), பி.சி.-யில் 65 சதவீதத்தினரும் நிதி ரீதியாகத் திணறி வருகின்றனர்.

ஐந்தில் ஒரு பராமரிப்பாளர் மாதம் 1,000 டொலர்களுக்கும் மேல் சொந்தப் பணத்தைச் செலவு செய்கின்றனர்.

பராமரிப்பிற்கான பணத் தேவையைப் பூர்த்தி செய்ய அதிக நேரம் வேலை செய்ய வேண்டியுள்ள அதேவேளை, பராமரிப்புப் பணிக்கான நேரத் தேவையால் வேலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் ஒரு ‘விசித்திரச் சுழற்சியில்’ சிக்கியுள்ளனர்.

பி.சி.-யில் 62 சதவீத பராமரிப்பாளர்கள் அரசாங்கத்திடமிருந்து தமக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை எனக் கருதுகின்றனர்.

பொது வீட்டுப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்துவோர் விகிதம் தேசிய அளவை விட இங்கு மிகக் குறைவாகவே உள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் நம்மில் பாதிப் பேர் பராமரிப்பாளர்களாக மாற வேண்டியிருக்கும் என CCCE அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் லிவ் மெண்டல்சோன் (Liv Mendelsohn) எச்சரித்துள்ளார்.

பராமரிப்பாளர்கள் மாதாந்த பராமரிப்பு கொடுப்பனவு (Caregiving allowance), எளிமையான வரிச் சலுகைகள் மற்றும் இலவச மனநல ஆலோசனைகளை அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர்.

அரசாங்கம் சில முதலீடுகளைச் செய்துள்ளதாகக் கூறினாலும், அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப பொது ஆதரவுத் திட்டங்கள் போதுமானதாக இல்லை எனப் பராமரிப்பு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles