எலி மற்றும் பிற சுண்டெலிகள் மூலம் பரவக்கூடிய ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒண்டாரியோ (Ontario) சுகாதார அமைச்சகம் அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கும் (Asymptomatic) மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொற்று பாதிப்புக்குள்ளான உல்லாசக் கப்பல் (Cruise) மற்றும் விமானப் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்தச் சோதனைகள் வழங்கப்படுகின்றன.
‘அதி-ஆபத்து’ (High-risk) பிரிவிலுள்ள மூன்று பயணிகள் சோதன முடிவு எப்படி வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
ஆனால், ‘குறைந்த ஆபத்து’ (Low-risk) பிரிவிலுள்ள 7 பயணிகள் பரிசோதனையில் தொற்று இல்லை (Negative) எனத் தெரியவந்தால், தங்களது 45 நாள் தனிமைப்படுத்தலை நிறுத்திக்கொள்ளலாம்.
ஹண்டாவைரஸின் அடைகாக்கும் காலம் (Incubation period) நீண்டது என்பதால், ஆரம்பத்தில் தொற்று இல்லை என வந்தாலும் பின்னர் அது பாசிட்டிவ் ஆக மாறலாம்.
எனவே இந்தச் சோதனைகள் மக்களுக்கு ஒரு போலிப் பாதுகாப்ப உணர்வைத் தந்துவிடக் கூடாது என கனடாவின் தலைமை பொதுச் சுகாதார அதிகாரி டாக்டர் ஜோஸ் ரெய்மர் (Dr. Joss Reimer) எச்சரித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, சர்வதேச அளவில் இதுவரை 10 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மே 2 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒண்டாரியோ சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தலைமையிலான குழுவினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.










