கனடாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேரை கைது செய்த பொலிஸார் 1.7 டொன் போதைப்பொருட்கள் மற்றும் 17 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அமெரிக்க எல்லையிலிருந்து லொரிகள் மூலம் கனடாவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதில் அமெரிக்கா மற்றும் கனடா இடையில் செல்லும் லொரிகளில் கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற போதை மருந்துகள் கடத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கனடா பொலிஸார் ‘புராஜெக்ட் பே’ என்ற பெயரில் அதிரடி கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஆண்டாரியாவில் 22 இடங்கள், விண்ட்சர், லசலே, கொரூனா, பிராம்ப்டன், மர்கம் மற்றும் க்லேடன் உள்ளிட்ட பகுதிகளிலும் நடந்த இந்த சோதனையில் 1.7 டொன் போதை மருந்துகள் மற்றும் 17 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த வலையமைப்புடன் தொடர்புடைய 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
அவர்களில், ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பு இந்திய மதிப்பில் 1039 கோடி ரூபாய் என மதிப்பிப்பட்டுள்ளது.
