கனடாவில் குழந்தைப் பராமரிப்புத் தொகை வழங்கத் தவறிய தந்தைக்கு சிறை!

தன் குழந்தையின் பராமரிப்பிற்காகத் தாய்க்கு வழங்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான டொலர்களை வழங்கத் தவறிய தந்தைக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து British Columbia ( B.C. ) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.

விசாரணை முடிவில், அத்தந்தை $37,312.54 டாலர்கள் நிலுவை வைத்திருப்பது தெரியவந்தது.

தன்னிடம் பணம் இல்லை எனவும், நிறுவனத்தின் வங்கிக் கணக்கை தான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த முடியாது என்றும் தந்தை வாதாடினார்.

ஆனால், அதே வங்கிக் கணக்கிலிருந்து ஆன்லைன் சூதாட்டம் (online gambling), ஆடை-அலங்காரப் பொருட்கள் வாங்குதல், விமானக் கட்டணங்கள் மற்றும் இரவு விடுதிகள் எனத் தனது சொந்தக் கேளிக்கைச் செலவுகளுக்குப் பணத்தைச் செலவிட்டுள்ளது வங்கி அறிக்கைகள் மூலம் அம்பலமானது.

கட்டாயக் கடமைகளைத் தவிர்த்து, போலி சாக்குகளைக் கூறி நீதிமன்றத்தை ஏமாற்ற முயன்றதாகத் தெரிவித்த நீதிபதி Micah Rankin (மைக்கா ரேங்கின்), 5 முறை பணத்தை செலுத்தத் தவறியதற்காக 15 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கினார்.

இருப்பினும், நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தினால் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles