கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணம் மற்றும் மெரிடைம்ஸ் (Maritimes) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீசிய அதிவேகக் காற்று காரணமாக மின்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால், கியூபெக்கில் மட்டும் ஒரு கட்டத்தில் 3,10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றித் தவித்தனர்.
குறிப்பாக Laurentians, Lanaudière மற்றும் Montérégie ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மின்கம்பங்கள் முறிந்தும், மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தும் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை Hydro-Québec களமிறக்கியுள்ளது.
இதேபோல் ஒன்ராறியோவின் Ottawa மற்றும் மெரிடைம்ஸ் பகுதிகளான Nova Scotia, New Brunswick ஆகியவற்றிலும் ஆயிரக்கணக்கானோர் மின்தடைக்கு முகம்கொடுத்துள்ளனர்.
கடுங்குளிர் மற்றும் காற்று காரணமாக மொன்றியலில் உள்ள Ecomuseum Zoo பூங்காவில் வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் ‘Genie’ என்ற கரடியின் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது.
வாரம் முழுவதும் பனிப்பொழிவு தொடரும் என்பதால், “குளிர் காலம் இன்னும் முடியவில்லை” என Environment Canada வானிலை ஆய்வாளர் Simon Legault எச்சரித்துள்ளார்.










