வடகிழக்கு ஒன்ராறியோ (Northeastern Ontario) பகுதியில் வீசி வரும் வரலாறு காணாத கடும் பனிப்புயல் காரணமாக அப்பகுதியே பனிப்போர்வையால் சூழப்பட்டுள்ளது.
குறிப்பாக சட்பரி (Greater Sudbury) மற்றும் சூ செயின்ட் மேரி (Sault Ste. Marie) போன்ற பகுதிகளில் 50 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.
இந்த ‘முன்னெப்போதும் இல்லாத’ புயல் காரணமாக North Bay, Timmins உள்ளிட்ட நகரங்களில் அவசர நிலை போன்ற சூழல் நிலவுகிறது. பல பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Laurentian University மற்றும் Cambrian College போன்ற கல்வி நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை சீராகும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை -33 டிகிரி செல்சியஸ் வரை கடுங்குளிர் நிலவக்கூடும் என்பதால் உறைபனி ஆபத்து (Frostbite) குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.










