எட்டோபிகோ துப்பாக்கிச் சூடு – ஒருவர் கவலைக்கிடம்!

எட்டோபிகோ (Etobicoke) பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஆடவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணியளவில் Scarlettwood Court மற்றும் Scarlett Road சந்திப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆணொருவரை மீட்டனர்.

அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின், உடனடியாக அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு (Trauma Center) கொண்டு செல்லப்பட்டார்.

தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தமைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை.

சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles