“தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” கனடாவின் பல இடங்களில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஸ்காபரோவின் பிரதான நினைவேந்தல் நிகழ்வு (Scarborough Vigil) ஆல்பர்ட் காம்ப்பெல் சதுக்கத்திலும், பிராம்ப்டன் நினைவேந்தல் சிங்குவாசி பூங்கா – தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி வளாக்கத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் முற்பகல் 11 மணி முதல் நடைபெற்ற பிராம்டன் நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்கள் பங்கெடுத்து, கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தாயகப் பாடல்கள் உணர்வுபூர்வமாக பாடப்பட்டதுடன், பொதுமக்கள் நினைவுத்தூபியில் மலர் வைத்து தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
அதேபோல் ஸ்காபரோவில் மாலை நடந்த நிகழ்விலும் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர். கனடாவின் மூன்று நிலை அரசாங்க, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.
இதனைத்தவிர தமிழ் வர்த்தக, அங்காடி நிலையங்களுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவாக படங்கள், மலர்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், தீபங்கள் ஏற்றி நினைவுகூரப்பட்டது.










