ஈரான் – அமெரிக்காவின் செயலுக்கு அமைச்சர் அனிதா கண்டனம்!

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முடக்கியிருப்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) கண்டனம் தெரிவித்துள்ளார்.

துருக்கி (Turkey) நாட்டுக்கான பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் ஈரானின் இந்த கடல்வழி முடக்கம் ஆகிய இரண்டுமே சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்ற பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) கருத்தை அனிதா ஆனந்த் வழிமொழிந்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதையூடாகவே நடப்பதால், இந்த முடக்கத்தினால் எரிபொருள் விலை உயர்ந்து ஏழை நாடுகளின் உணவு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மோதலில் கனடா நேரடியாக இராணுவ ரீதியில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், தூதரக ரீதியிலான தீர்வுகளுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles