அமெரிக்காவின் அலபாமா (Alabama) மாநிலத்தில், தனது கணவர் தன்னைத் தொந்தரவு செய்ததாகக் கூறி, அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 65 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
65 வயதான ஷெர்ரி கிளட்ஸ் (Sherri Clutts) அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது கணவர் டிமோதி கிளட்ஸ் (Timothy Clutts) அவரை அடிக்கடி அறைக்குள் வந்து நலன் விசாரித்துள்ளார்.
இதனால் எரிச்சலடைந்த ஷெர்ரி, கணவரைக் கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணவர் மீண்டும் அறைக்குள் வருவார் என எதிர்பார்த்து ஷெர்ரி துப்பாக்கியை எடுத்து வைத்துள்ளார்.
அவர் வராததால், வரவேற்பறைக்குச் சென்ற ஷெர்ரி, அங்கு அமர்ந்திருந்த கணவரை மார்பில் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
15 ஆண்டு காலத் திருமண வாழ்க்கையைக் கொண்ட இவர், பொலிஸார் வந்ததும் தனது கணவரைத் தானே சுட்டுக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
“அவர் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவு செய்தது எரிச்சலாக இருந்தது” என்பதே அவர் கூறிய காரணம்.
இந்தத் தம்பதியினருக்கு இடையே முன்னதாக எவ்வித வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என பிராங்க்ளின் கவுண்டி (Franklin County) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷெர்ரியின் மனநிலை குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
