GTA வில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சத்தைத் தொடும்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் லீட்டருக்கு 7 சதங்களினால் (7 cents) அதிகரிக்கவுள்ளது.

இதன்படி, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 173.9 சதங்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் En-Pro நிறுவனத்தின் தலைமை பகுப்பாய்வாளர் ரோஜர் மெக்நைட் (Roger McKnight குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள தடைகள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு காணப்படும் மிக உயர்ந்த விலை இதுவாகும்.

போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும், எரிபொருள் விலை பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen’s University) எரிசக்தி கொள்கை ஆய்வாளர் வார்ரன் மேபி (Warren Mabee) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles