எடொபிகோவில் பெண்ணை மோதிவிட்டு தப்பிய வாகன சாரதி! வலைவீசும் பொலிசார்!

டொராண்டோ எடொபிகோவில் பெண் பாதசாரி ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகன ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர்.

நேற்றிரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 வயதுடைய பெண் பாதசாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், கடந்த மாதம் எடொபிகோவில் நடைபெற்ற மற்றொரு விபத்துச் சம்பவத்தில் ஆண் பாதசாரியொருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த சம்பவம் ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை 2:30 மணிக்கு நடந்துள்ளது.

வெள்ளை நிறத்திலான கார் ஒன்று குறித்த நபரை மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வாகனத்தை கண்டுபிடிக்க, அப்பகுதி மக்களும் டாஷ்கேம் வீடியோ உள்ள வாகன சாரதிகளும் உதவ வேண்டும் என்று பொலிசார் கோரியுள்ளனர்.

தகவல் வழங்க விரும்புவோர், டொராண்டோ போக்குவரத்து விசாரணை பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Video thumbnail
உயிரை உருக்கும் வலி தந்த வடுக்கள்! கனடா பாடசாலை துப்பாக்கி தாரியின் தந்தை உருக்கம்!
01:50
Video thumbnail
ஹாமில்டனில் வாகன திருட்டு விசாரணையில் 15 வயதிற்குட்பட்ட 3 இளைஞர் கைது!
01:09
Video thumbnail
கனடாவில் கப்பம் கோரும் கும்பல்! நாட்டை விட்டு வெளியேறும் குடும்பங்கள்
01:22
Video thumbnail
தீரா வலி தந்து, கருகிப் போன மொட்டுக்கள்!
00:23
Video thumbnail
கனடாவில் வாகன திருட்டுகள் குறைந்தன- புதிய அறிக்கைஅமைச்சர் Gary தலைமையில் தேசிய செயல்திட்டம்
00:47
Video thumbnail
‘போலி பில்லியனர் காதலன்’ மோசடி வழக்குறொரண்டோ நபருக்கு சிறைத் தண்டனை
01:03
Video thumbnail
Tumbler Ridge பாடசாலை துப்பாக்கிதாரிக்கு 18 வயது!சம்பவத்தில் 5 மாணவர்கள், ஆசிரியர் மரணம்
00:50
Video thumbnail
93 வயது நபருக்கெதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்கு வருகிறது
00:51
Video thumbnail
ஸ்காபரோ Tim Hortons-ல் துப்பாக்கிச்சூடு! 15 வயது இளைஞர் கைது
01:07
Video thumbnail
Ajaxஇல் ஒரு மில்லியன் டொலர் வென்று மனைவியின் கனவை நனவாக்கும் தமிழர்
00:43

Related Articles

Latest Articles