Courtice பகுதியில் பயங்கர வீடு தீ விபத்து: ஒருவர் காணவில்லை!

கனடாவின் Courtice பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர வீட்டுத் தீ விபத்தில்  மாயமான ஒருவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என Durham Regional Police தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில் Nash மற்றும் Varcoe வீதிகளுக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினரால் வீட்டிற்குள் செல்ல முடியாத நிலை நிலவியதாகவும், ஒரு நபர் வீட்டிற்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது தீ முழுமையாக அணைக்கப்பட்டிருந்தாலும், அப்பகுதியில் பொலிஸ் மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து ஆராய்வதற்காக The Office of the Fire Marshal அழைக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles