றொரண்டோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான இர்மா கலாஸ்டிகா (Irma Galastica), 2024 ஆகஸ்ட் 31 முதல் காணாமல் போயிருந்தார்.
அவரைப் பற்றிய தகவல் தருவோருக்கு $25,000 சன்மானம் வழங்கப்படும் என ஹால்டன் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஓகஸ்ட் 30, 2024 அன்று றொரண்டோவில் உள்ள தனது குடியிருப்பிலிருந்து வெளியேறிய இர்மா, அன்று இரவு ஹாமில்டனில் (Hamilton) உள்ள ‘சன்கோபா’ (Sankofa) என்ற பாரிற்குச் சென்றுள்ளார்.
பின்னர், அங்கிருந்து சில ஆண்களுடன் ஒரு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.
அவர் கடைசியாக பர்லிங்டனில் (Burlington) உள்ள ஒரு வீட்டில் இருந்தபோது, தனது நண்பர் ஒருவருக்கு, “நான் ஹாமில்டனில் இருக்கிறேன், ஒருவேளை நான் வீடு திரும்பாவிட்டால் இதை நினைவில் கொள்,” என ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதுவே அவரிடமிருந்து வந்த கடைசித் தகவலாகும்.
வெள்ளையின நபருடன் காணப்பட்டதாகவும், அந்த நபர் இர்மா காணாமல் போன சில நாட்களில் மெக்சிகோவிற்குத் தப்பியோடிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை தற்போது “கொலை” (Homicide) என்ற கோணத்திலும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இர்மாவின் இருப்பிடம் குறித்த துல்லியமான தகவல்களைத் தருவோருக்கு இந்த $25,000 சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










