பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனது காதலியின் இரண்டு வயது மகனைத் தாக்கிய குற்றத்திற்காக K.J.M. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ‘நானி கமெரா’ (Nanny camera) மூலம் இந்த நபர் சிறுவனின் கழுத்தை நெரிப்பதும், உதைப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு நாட்களில் இருமுறை இத்தகைய தாக்குதல்களை அவர் நடத்தியுள்ளார்.
நீதிபதி தமேரா கோலின்ஸ்கி (Judge Tamera Golinsky) தனது தீர்ப்பில், “பாதுகாப்பாக இருக்க வேண்டிய படுக்கையறையில், நம்பிக்கைக்குரிய ஒருவரால் இழைக்கப்பட்ட இந்த வன்முறை அந்தச் சிறுவனின் எதிர்காலத்தில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளபர்.
அதன்படி, ஆறு மாத காலச் சிறைத் தண்டனையைத் தொடர்ந்து, அவர் 18 மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பில் (Probation) இருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
அந்தக் காலப்பகுதியில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் பின்னணி மற்றும் அவர் காட்டிய வருத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசுத் தரப்பு கோரிய ஒரு வருடத் தண்டனைக்கு பதிலாக ஆறு மாதங்களாகக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
