அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போப் லியோ XIV ஆகியோரிமை யே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இயேசு கிறிஸ்துவைப் போன்ற பிம்பங்களை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதற்கு ட்ரம்பிற்கு, கனடிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (Canadian Conference of Catholic Bishops) கண்டனம் தெரிவித்துள்ளது.
எந்தவொரு நாட்டின் அரசியல் விவகாரங்களிலும் தலையிட விரும்பவில்லை என்றாலும், அரசியல் தலைவர்களை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டு பிம்பங்களை உருவாக்குவது மரியாதையற்ற செயல் என்பதையும் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது நம்பிக்கையையும் அரசியல் அதிகாரத்தையும் குழப்புவதாகவும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் (Iran) மீதான தாக்குதல் மற்றும் போர் குறித்து போப் லியோ XIV முன்வைத்த விமர்சனங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் அவரைத் தனது சமூக வலைத்தளங்களில் கடுமையாகச் சாடி வருகிறார்.
போப் லியோ, போரினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காகக் குரல் கொடுப்பதை ஒரு ‘ஆன்மீக கடமை‘ என்று முன்வைத்துள்ளார்.
போப்பின் அமைதி முயற்சிகளுக்கு இங்கிலாந்து திருச்சபையின் தலைவரான பேராயர் சாரா முல்லலி (Archbishop Sarah Mullally) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
போர் மற்றும் வன்முறைக்கு எதிராகப் போப் லியோ XIV எடுத்து வரும் அமைதி முயற்சிகள் மனிதாபிமான அடிப்படையிலானவை எனவே, அதற்கு ஆதரவாகக் கனடிய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளன
