டொராண்டோவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) ரசிகர் திருவிழாவிற்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மாநகர சபையின் திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை உருவாக்குமாறு மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow), நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை போர்ட் யார்க் (Fort York) மற்றும் தி பென்ட்வே (The Bentway) பகுதிகளில் நடைபெறவுள்ள இந்தத் திருவிழா, ஆரம்பத்தில் இலவச நிகழ்வாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக $10 நுழைவுக் கட்டணம் மற்றும் $100 முதல் $300 வரையிலான வி.ஐ.பி (VIP) கட்டணங்களை அதிகாரிகள் பரிந்துரைத்திருந்தனர்.
மக்கள் செலுத்தும் சொத்து வரியின் மூலம் ஏற்கனவே இதுபோன்ற பொது நிகழ்வுகளுக்கு நிதியளிக்கப்படுவதால், இதற்கும் கட்டணம் வசூலிப்பது சரியல்ல என்று மேயர் ஒலிவியா சௌ கருதுகிறார்.
20,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்வை, பாதுகாப்பான முறையிலும் அதே சமயம் இலவசமாகவும் நடத்துவதற்கான புதிய வரைவுத் திட்டத்தை அடுத்த வாரம் நகர சபையில் சமர்ப்பிக்குமாறு மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்










