கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் கட்சி, றொரண்டோவில் நடைபெற்ற இரண்டு இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளது.
யுனிவர்சிட்டி—ரோஸ்டேல் (University—Rosedale) மற்றும் ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட் (Scarborough Southwest) ஆகிய இரு தொகுதிகளில் கிடைத்த வெற்றிகள் மூலம், லிபரல் கட்சியின் மொத்த இடங்கள் 173 ஆக உயர்ந்துள்ளன.
இதன் மூலம், கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவில் மீண்டும் ஒரு பெரும்பான்மை அரசு உருவாவதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
வெறும் 16 மாதங்களுக்கு முன்பு ஒரு தனிநபர் நிலையில் இருந்த மார்க் கார்னி, கருத்துக்கணிப்புகளில் 20 புள்ளிகள் பின்தங்கியிருந்த தனது கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெர்போன் (Terrebonne) தொகுதியில் தேர்தல் முடிவுகள் இன்னும் இழுபறியாக நீடிக்கின்றன.
அடுத்த பொதுத்தேர்தல் ஒக்டோபர் 2029 இல் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த வெற்றி மார்க் கார்னி அரசாங்கத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது.










