கனடாவின் புதிய குடிவரவுச் சட்டமான C-12, அகதிகள் புகலிடக் கோரிக்கையைச் சமர்ப்பிப்பதில் பெரும் தடைகளை உருவாக்கியுள்ளது.
இச்சட்டத்தின்படி, கனடாவிற்கு முதன்முதலில் வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் அகதிகள் கோரிக்கைகள், குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் (Immigration and Refugee Board) விசாரணைக்குத் தகுதியற்றதாகக் கருதப்படும்.
இந்த சட்டமானது 2020-ஆம் ஆண்டு முதல் பின்னோக்கிச் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், Mohammed Al Hindi என்ற பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர், 2023 இல் தனது சகோதரிக்குச் சிறுநீரக தானம் செய்ய கனடா வந்திருந்தார்.
போரின் காரணமாகத் தற்போது அகதியாகக் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காசாவில் (Gaza) தற்போது சுகாதார வசதிகள் ஏதுமற்ற நிலையில், இவர் செய்வதறியாது தவிக்கிறார்.
ஈரானைச் (Iran) சேர்ந்த பெண் ஒருவர், அரசியல் கருத்துகளைப் பகிர்ந்ததால் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலையில், இந்தச் சட்டத்தால் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.
அவர் புற்றுநோய் பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வருவது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
இதுபோன்ற சுமார் 30,000 அகதிகள் இத்தகைய அறிவிப்புகளைப் பெறக்கூடும் என்று குடிவரவுத் துறை மதிப்பிட்டுள்ளது.
நிராகரிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ‘வெளியேற்றத்திற்கு முந்தைய இடர் மதிப்பீட்டை’ (Pre-removal risk assessment) கோரலாம்.
இருப்பினும், அதன் வெற்றி விகிதம் மிகக் குறைவாக காணப்படுவதாக எட்மன்டனைச் (Edmonton) சேர்ந்த சட்ட வல்லுநர் ஜுமான் எல்-அஸ்மர் (Jouman El-Asmar) சுட்டிக்காட்டியுள்ளார்.










