கனடாவில் நிலச்சரிவு – 5,000 பேரின் மின்சாரம் துண்டிப்பு – கோக்விட்லம் பகுதியில் கடும் மழை!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) கடற்கரைப் பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது.

இதன் காரணமாக கனடாவின் கோக்விட்லம் (Coquitlam) நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் Pipeline Road பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு தொழிற்சாலைக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோக்விட்லம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர் ஸ்காட் யங் (Scott Young) உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக, இதுவரை எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles