பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கனடாவின் கோக்விட்லம் (Coquitlam) நகரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சுமார் 5,000 வாடிக்கையாளர்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணியளவில் Pipeline Road பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு தொழிற்சாலைக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோக்விட்லம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் தலைவர் ஸ்காட் யங் (Scott Young) உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக, இதுவரை எவ்வித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.










