டொராண்டோ நகரின் மையப்பகுதியில் மக்களை தாக்கும் மர்ம நபர் – பாதசாரிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை!

டொராண்டோ (Toronto) நகரின் பரபரப்பான பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி மதியம், Artem என்பவர் தனது நண்பருடன் Union Station பகுதியில் இருந்து Eaton Centre நோக்கி மதிய உணவிற்காகச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென அவரது முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் Artem மயக்கமடைந்ததோடு, அவரது இடது புருவத்திற்குக் கீழே பலத்த காயம் ஏற்பட்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதே நபர் அந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக Bay மற்றும் Front வீதிகள் சந்திப்பில் மற்றொருவரையும் தாக்கியதாகப் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீல நிறக் கோட் அணிந்திருந்த, சுமார் 5 அடி 9 அங்குல உயரம் கொண்ட அந்தச் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பாதுகாப்பானதாகக் கருதப்படும் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் இத்தகைய வன்முறை நிகழ்ந்துள்ளதால், அப்பகுதியில் நடமாடும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles