மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பல்களுக்கு வலைவீச்சு: CBSA இன் குடிவரவு விசாரணைகள் ஆரம்பம்!

கனடா முழுவதும் பரவியுள்ள “மிரட்டிப் பணம் பறிக்கும்” (Extortion) வலையமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில், கனடா எல்லை சேவைகள் முகமை (CBSA) 372 குடிவரவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பசிபிக் மற்றும் பிரெய்ரி பகுதிகளில் தொடங்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை, தற்போது டொராண்டோ (Greater Toronto Area) பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 70 பேருக்கு நாடு கடத்தல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, அதில் 35 பேர் ஏற்கனவே கனடாவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுரே (Surrey) நகரில் இத்தகைய குற்றங்கள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

கிரிமினல் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட Arshdeep Singh மற்றும் Sukhnaaz Singh Sandhu ஆகியோர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டதை CBSA முன்னுதாரணமாகக் குறிப்பிட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கனடாவில் தங்குவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள CBSA தலைவர் Erin O’Gorman, இது போன்ற கும்பல்கள் குறித்துத் தகவல் வழங்க பிரத்தியேக தொலைபேசி சேவையையும் (Tip line) அறிமுகப்படுத்தியுள்ளார்.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles