டொராண்டோவில் பலத்த காற்று எச்சரிக்கை – மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்!

டொராண்டோ (Toronto) மற்றும் GTHA பகுதிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பல நாட்கள் நீடிக்கும் வானிலை மாற்றத்தினால், மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் மரக்கிளைகள் முறிந்து விழுவதற்கும், ஆங்காங்கே மின்சாரத் தடை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து இதமாக இருந்தாலும், இரவு நேரத்தில் திடீரென வெப்பநிலை வீழ்ச்சியும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை வடமேற்கிலிருந்து வீசும் குளிர்காற்றினால் சில இடங்களில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும் அன்றைய தினம் காலை நேரத்தில் கடும் குளிர் நிலவும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வெள்ளிக்கிழமை வசந்த காலத்தின் (Spring) தொடக்கத்தை முன்னிட்டு இயல்பான வெப்பநிலை நிலவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles